A few words
About Us
History
பேரவையின் தோற்றம்
தமிழ் இளைஞர் மணி மன்றம் மலேசிய நாட்டில் சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு
முன்னர்தான் பதிவு கிடைத்தது. 14-1-1956ல் பதிவு பெற்ற இந்த இளைஞர் இயக்கம் இன்று
வரை 60 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகின்றது. அதற்குக் காரணம்
இந்த இயக்கத்தின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.
1956ல் பதிவு பெற்றாலும் இம்மன்றம் 1954ல் அமைப்புக் கூட்டம் போடப்பட்டு பின்னர்தான்
பதிவுக்கு அனுப்பட்டது. அதற்கு முன்னர் இம்மன்றம் மாணவர் மணி மன்றம் என்ற பெயரிலே செயல்பட்டு வந்தது.
